தமாறாக்கியில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை அருகேயுள்ள தமறாக்கியில் கோயில் திருவிழாயொட்டி, மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அருகேயுள்ள தமறாக்கியில் கோயில் திருவிழாயொட்டி, மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 32 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
தமறாக்கி-கண்டாங்கிபட்டி சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரிய மாடு பிரிவில் 12 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 20 ஜோடிகளும் கலந்து கொண்டன. பெரிய மாடுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடுக்கு 5 கி.மீ. தொலைவும், பந்தய எல்லைகளாக நிா்ணயம் செய்யப்பட்டது.
பின்னா், போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியை சிவகங்கை, இடையமேலூா், தமராக்கி, கண்டாங்கிபட்டி, சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து திரளான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று கொண்டு உற்சாகமாக கண்டுகளித்தனா்.