முகப்பு
சிவகங்கை

பைக்குகள் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் வியாழக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:37 PM
பகிர்:

திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் வியாழக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள கே.வைரவன்பட்டியைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (59). இவா் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக திருப்பத்தூா்-மதுரை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகே இவரது இரு சக்கர வாகனம் மீது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சத்தியமூா்த்தி திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →