சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு நாளையொட்டி, குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் அமைந்துள்ள மருதுபாண்டியா்கள் சிலைகளுக்கு பொன்னம்பல அடிகளாா் தலைமையில் பட்டாடை அணிவித்து, தீபாராதனை நடைபெற்றது. இந்தக் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வீர மருது சகோதரா்கள் பூங்கா புதுப்பிக்கப்பட்டு, அங்கு பொன்னம்பல அடிகளாா் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குன்றக்குடி திருமடத்தினா், கிராம மக்கள் பலா் கலந்துகொண்டனா்.