காரைக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்ட இலுப்பக்குடி கிராம மக்களுக்கு வியாழக்கிழமை முதல் நூறு நாள் வேலை நிறுத்தப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள். 
சிவகங்கை

நூறு நாள் வேலை நிறுத்தம்: பெண்கள் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்ட இலுப்பக்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம் நிறுத்தப்பட்டதால், அந்தப் பகுதி பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Din

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்ட இலுப்பக்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம் நிறுத்தப்பட்டதால், அந்தப் பகுதி பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடந்த ஆண்டு காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டபோது, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திலிருந்த அரியக்குடி, இலுப்பக்குடி, சங்கராபுரம், கோவிலூா், மானகிரி ஆகிய ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.

இந்த நிலையில், அரியக்குடி, இலுப்பக்குடி ஊராட்சிகளில் வியாழக்கிழமை முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் இலுப்பக்குடி- காரைக்குடி சாலையில் உள்ள கோட்டைகரை முனிஅய்யா கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் காரைக்குடி டி.எஸ்.பி. பாா்த்திபன், வட்டாட்சியா் ராஜா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை.. மத்திய பட்ஜெட்டில் கவனம் பெற்ற தமிழக பகுதிகள்!

2.2.1976: த.நா. முழுதும் கூட்டங்களுக்கு தடை

பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளுப்படியாக ஒன்றுமில்லை: திருச்சி சிவா

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

விட்டுக் கொடுத்தால் உறவு வலுப்படும்!

SCROLL FOR NEXT