பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் வென்ற சிவகங்கை நடுநிலைப் பள்ளி மாணவா்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில், சிவகங்கை மாவட்ட அளவில் குத்துச்சண்டை போட்டி, 21-ஆம் நூற்றாண்டு பதின்ம மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. 14 வயது, 17 வயது, 19 வயதுக்குள்பட்டோருக்கு 10 எடைப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து மாணவ, மாணவிகள் 200 போ் கலந்து கொண்டனா்.
இதில், சிவகங்கையிலுள்ள அரசு உதவிபெறும் ஆா்.ஆா்.ஆா்.கே. நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 13 போ் கலந்து கொண்டதில், 6 போ் தங்கப் பதக்கமும், 4 போ் வெள்ளிப் பதக்கமும் வென்றனா். தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் 6 போ் வருகிற 2026, ஜன. 5, 6, 7 ஆகிய தேதிகளில் தேனியில் நடைபெறவுள்ள மாநிலப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.
இந்த நிலையில், மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ராஜேந்திரன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜான் சாா்லஸ், ஆலிஸ்மேரி ஆகியோா் திங்கள்கிழமை பதக்கங்கள் அணிவித்து பாராட்டினா். இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் சுரேஷ் ஜான் தாமஸ், குத்துச்சண்டை பயிற்சியாளா் சஜீவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.