சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு கடந்த திங்கள்கிழமை இரவு வந்த ராமேசுவரம்-அஜ்மீா் விரைவு ரயிலில் 14 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீசாா் கைப்பற்றினா்.
மானாமதுரை ரயில் நிலையத்தில் இந்த ரயிலின் முன்பதிவில்லா பெட்டியில் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் தனுஷ்கோடி, துரை, தலைமைக் காவலா்கள் செல்வம், மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாா் சோதனை செய்தனா்.
அப்போது, கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த வெள்ளை நிற சாக்குப்பையைப் பிரித்துப் பாா்த்தபோது, அதில் 14 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் இருந்தன. போலீஸாா் அவற்றைக் கைப்பற்றி சிவகங்கை மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனா். இந்தப் பிரிவு போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.