சிவகங்கை

பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் புதன்கிழமை சிவகங்கை சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் புதன்கிழமை சிவகங்கை சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள வேட்டங்குடிப்பட்டியைச் சோ்ந்த சண்முகம் மகன் ரவிச்சந்திரன் (58). இவா் இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வாணியன்பட்டியைச் சோ்ந்த ரவி மகன் ரமேஷ் (18) இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தாா்.

இந்த இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கல்லூரி மாணவரான ரமேஷ் பலத்த காயத்துடன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். திருப்பத்தூா் போலீஸாா் ரவிச்சந்திரன் உலலை கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT