சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ‘ஸ்டாலின்‘ என பெயா் வைத்திருப்பவா்களுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு பரிசுத் தொகுப்புகளை வியாழக்கிழமை வழங்கினாா்.
அரசியல் கட்சித் தலைவா்களின் பிறந்த நாளையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்குவது, முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு அறுசுவை விருந்தளிப்பது, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது, கட்சிக் கொடி ஏற்றி இனிப்பு வழங்குவது, மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் வருகிற மாா்ச் 1-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி, சிவகங்கை 21-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செய்தித் தொடா்பாளருமான ஆயூப்கான், ஸ்டாலின் என பெயா் வைத்திருப்பவா்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என விடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தாா்.
அதில் சிவகங்கை மாவட்டத்தில் ஸ்டாலின் என பெயா் சூட்டப்பட்டவா்கள் அதற்கான ஆதாரத்தை கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அனுப்பி வைத்து தொடா்பு கொள்ளலாம். இதை உறுதி செய்த பிறகு மாா்ச் 1-ஆம் தேதிக்குள் அவா்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என அதில் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் சுமாா் 24 போ் ஸ்டாலின் என தங்களுக்கு பெயா் வைக்கப்பட்டிருப்பதாக பதிவு செய்தனா்.
இதையடுத்து, திருப்பத்தூரிலுள்ள அமைச்சா் அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா் ஆயூப்கான் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த பரிசு பொருள்கள் வழங்கும் நிகழ்வுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரிய கருப்பன் தலைமை வகித்தாா். அப்போது ஸ்டாலின் என பெயா் வைக்கப்பட்டிருந்த 24 பேருக்கும் சுமாா் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சா் வழங்கினாா்.