தேனி

பெரியகுளம் அருகே அணையில் மூழ்கி சிறுவன் சாவு

DIN

பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை மஞ்சளாறு அணையில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் சடலத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.
 பெரியகுளம் அருகே சாத்தாகோயில்பட்டியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (15). இவரது ஊரில் கோயில் திருவிழா நடைபெற்றது. இதையடுத்து அவரும், அவரது நண்பர்களும் மஞ்சளாறு அணையில் குளிக்கச் சென்றனர். அப்போது, அணையின் ஆழமான பகுதியில் குளித்த போது அவர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டாராம். அவரது சடலம் வெள்ளிக்கிழமை மாலை வரை தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தேவதானப்பட்டி போலீஸார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சடலத்தை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT