பெரியகுளத்தில் உள்ள வங்கியில் போலி நகையை அடகு வைக்க முயன்றவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பெரியகுளம் சுதந்திரவீதியில் மத்திய அரசு வங்கி உள்ளது. இந்த வங்கியில் பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (38) என்பவர் 10 கிராம் எடையுள்ள 8 தங்க வளையல்களை அடகு வைக்க முயன்றுள்ளார். அது போலி நகைகள் என்பதை அறிந்த வங்கி மேலாளர் சுசிலா(32), தென்கரை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.