முகப்பு
தேனி

கம்பம் பகுதியில் எள்ளுக்கு அதிக விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம் வட்டாரத்தில் எள் விளைச்சல் அதிகரித்துள்ளதுடன், போதிய விலை கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

Updated On : 9 ஜூலை, 2018 at 7:49 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கம்பம் வட்டாரத்தில் எள் விளைச்சல் அதிகரித்துள்ளதுடன், போதிய விலை கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 
       தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பரப்பளவில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இங்கு, கம்பு, சோளம், மொச்சை உள்ளிட்ட தானிய வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. 
நடப்பு சீசனில் எள் பயிரிடப்பட்டிருந்தது. 90 முதல் 100 நாள் பயிரான எள், தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. 
   மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட எள் நல்ல விளைச்சலாகவும், அதிக எண்ணெய் சத்தும் கொண்டதாக இருப்பதால், சந்தையில் கிலோ ரூ. 100 வரை விற்பனையாகிறது.
    அதே நேரம், கூடலூர் வெட்டுக்காடு முதல் அனுமந்தன்பட்டி வரை நெல் வயல்களில் படியிரிடப்பட்டிருந்த எள் செடிகள் சுமாரான மகசூலையே தந்துள்ளது. மேலும், முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், விவசாயிகள் விரைவாக அறுவடையை தொடங்கினர். இதனால் எதிர்பார்த்த அளவு விலையும் கிடைக்கவில்லை.
    மானாவாரி நிலங்களில் எள் பயிரிட்ட விவசாயிகள் காத்திருந்து, தகுந்த பருவத்தில் அறுவடை செய்ததால், நல்ல விலை கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.