பெரியகுளம் அருகே கிணற்றில் ஆண்சடலம்
பெரியகுளம் அருகே சின்னயம்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது.
பெரியகுளம் அருகே சின்னயம்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இங்கு பாண்டி என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறாராம். இவர் புதன்கிழமையன்று தோட்டத்தை சுற்றி பார்த்த்தபோது கிணற்றில் 40 வயதுள்ள ஆணின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து தென்கரை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.