பைக் மீது பள்ளி பேருந்து மோதல்: ஓட்டுநர் கைது
உத்தமபாளையம் அருகே பைக் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் போலீஸார் புதன் கிழமை கைது செய்தனர்.
உத்தமபாளையம் அருகே பைக் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் போலீஸார் புதன் கிழமை கைது செய்தனர்.
ராயப்பன்பட்டி தனியார் பெண்கள் பள்ளி பேருந்து செவ்வாய்க்கிழமை கோம்பையில் மாணவிகளை ஏற்றுவதற்காக சென்றது. அப்போது, அவ்வழியாக உத்தமபாளையத்தை சேர்ந்த இருதயராஜ் மகன் சகாயராஜ்(40) பைக்கில் வந்தவர் மீது பள்ளிப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த சகாயராஜ் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோம்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராயப்பன்பட்டியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பனிமனைராஜை(50) கைது செய்தனர்.