முகப்பு
தேனி

தேனியில் மணல் திருட்டைத் தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை, மணல் திருட்டைத் தடுத்து நிறுத்தக் கோரி அனைத்திந்திய இளைஞர் பெரும் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 15 மே, 2018 at 12:46 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை, மணல் திருட்டைத் தடுத்து நிறுத்தக் கோரி அனைத்திந்திய இளைஞர் பெரும் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் இரா.தமிழ்பெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலர் க.பாரதி, மாவட்டத் தலைவர் முத்துமுருகன், பொருளாளர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் தொடங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மாவட்டத்தில் ஆற்று மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.
காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், ஸ்டெர்லைட் ஆலை ஆகியவற்றை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.