மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
பெரியகுளம் அருகே திங்கள்கிழமை மூதாட்டியிடம் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
பெரியகுளம் அருகே திங்கள்கிழமை மூதாட்டியிடம் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த பாண்டி மனைவி இருளாயி (60). இவர் தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை காலை வீட்டில் தனியாக இருந்த போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் இருளாயிடம் குடிக்க தண்ணீர் கேட்டாராம். அப்போது இருளாயி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை அவர் அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டாராம். இதுகுறித்து தென்கரை காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.