தேனி

மாநில தடகளப் போட்டி: திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி மாணவர் சிறப்பிடம்

DIN

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மாநில அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்றார்.
61ஆவது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் நெய்வேலி பாரதி விளையாட்டு மைதானத்தில் 3 நாள்கள் நடைபெற்றது.
இதில், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.மதன் வெங்கடேஷ், 14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவு குண்டு எறிதல் போட்டியில்,   தங்கப்பதக்கமும், வட்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பரிசுகள் வழங்கினார். மாணவர் எம்.மதன் வெங்கடேஷ், இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.  வெற்றி பெற்ற மாணவரை பள்ளித் தாளாளர் அ.ராமமூர்த்தி, முதல்வர் இரா.செல்வ வைஷ்ணவி உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது அருந்துவோரை விட கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்: ஆய்வில் தகவல்!

வெம்பக்கோட்டை அருகே வைகாசி விசாகத் திருவிழா

ஆழ்வாா்திருநகரி கோயிலில் தேரோட்டம்

திருவாடானை, தொண்டி பகுதிகளில் இன்று மின் தடை

குமரி பகவதியம்மன் கோயிலில் தேரோட்டம்

SCROLL FOR NEXT