தேனி

குமுளியில் பேருந்து மோதி துப்புரவு தொழிலாளி பலி

DIN

தேனி மாவட்டம் குமுளி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதியதில் துப்புரவுத்  தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
 இடுக்கி மாவட்டம் குமுளி தேக்கடி, அம்பாடி காலனியைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் அய்யப்பன் (55). துப்புரவுத் தொழிலாளியான இவர் செவ்வாய்க்கிழமை காலை குமுளி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அரசுப்பேருந்து ஒன்று திரும்புவதற்காக பின்னால் வந்தபோது, அய்யப்பன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அய்யப்பன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது பற்றி குமுளி காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT