தேனி

மதுபோதையில் மனைவியை கல்லால் தாக்கிய கணவர் கைது

DIN

கூடலூரில்  மதுபோதையில் மனைவியை கல்லால் தாக்கி காயப்படுத்திய கணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கூடலூர்  காலனியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(35), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஷோபனா(28). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஈஸ்வரன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். வியாழக்கிழமை இரவு  மது போதையில் வீட்டுக்கு வந்த ஈஸ்வரனை, இவரது மகள் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமைடந்த ஈஸ்வரன் மகளைத் தாக்க முயற்சித்துள்ளார். இதை மனைவி ஷோபனா தடுக்கவே  ஆத்திரமடைந்த ஈஸ்வரன், அருகில் இருந்த கல்லை எடுத்து மனைவியைத் தாக்கினார். இதில் ஷோபனாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஷோபனா அளித்தப் புகாரின் பேரில், ஈஸ்வரனைப் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT