தேனி

அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி

DIN

தேனி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் பிரசார பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்க, மாவட்டக் காவல் துறை நிர்வாகம் சார்பில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க, ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். சீனிவாசன், ஆண்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் பாலகுரு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
பெரியகுளம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்கு, பெரியகுளம் 
காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தேனி காவல் நிலைய ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்கு, போடி காவல் துணைக் காணிப்பாளர் வி. ஈஸ்வரன், போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கம்பம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க, உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ. வீரபாண்டி, கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆர். பொன்னிவளவன் ஆகியோர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT