தேனி

அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டி: டிஎல்ஓ, ஏஓஸி , பாங்க் ஆப் பரோடா அணிகள் வெற்றி

பெரியகுளத்தில் நடைபெற்று வரும்  அகில இந்திய கூடைப்பந்தாட்டப்போட்டியில் டிஎல்ஓ, ஏஓஸி , பாங்க் ஆப் பரோடா அணிகள் வெற்றி பெற்றன.

DIN

பெரியகுளத்தில் நடைபெற்று வரும்  அகில இந்திய கூடைப்பந்தாட்டப்போட்டியில் டிஎல்ஓ, ஏஓஸி , பாங்க் ஆப் பரோடா அணிகள் வெற்றி பெற்றன.
பெரியகுளம் , சில்வர்ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 60 ஆவது அகில இந்திய கூடைப்பந்தாட்டப்போட்டி மே 15 ஆம் தேதி முதல் மே 21 வரை நடைபெறுகிறது. 
"நாக் அவுட்' முறையில் நடைபெற்று வரும் போட்டியில் நான்காம் நாளான சனிக்கிழமை  வாரணாசி டிஎல்ஓ அணி,  கேரள மாநில மின்வாரிய அணியை  62க்கு 57 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
அதேபோல் செகந்திராபாத் ஏ.ஓ.ஸி அணி, சென்னை ஐசிஎப் அணியை 76க்கு 60 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
பெங்களூரு பாங்க் ஆப் பரோடா அணி, லோனாவானா இந்திய கடற்படை அணியை  105க்கு 100 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
மே 19 ஆம் தேதி முதல் லீக் சுற்றுகள் தொடங்குகிறது.  மே 21 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT