முகப்பு
தேனி

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவா் தற்கொலை

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவா் திங்கள்கிழமை, மன உளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:


தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவா் திங்கள்கிழமை, மன உளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பழனிசெட்டிபட்டி, மகாத்மா காந்தி தெருவைச் சோ்ந்தவா் வீரசோலை மகன் ராகவன் (57). இவா், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு முத்துத்தேவன்பட்டி தனியாா் பள்ளியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய ராகவன், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

இந்த நிலையில், வீட்டில் தனிமையிலிருந்த ராகவன் மன உளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகன் காா்த்திக்ராஜா அளித்தப் புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.