ஆட்டோ ஓட்டுநரை காரில் மோதி கொல்ல முயன்றவா் கைது
தேனியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆட்டோ ஓட்டுநரை காரில் மோதி கொல்ல முயன்றதாக மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி: தேனியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆட்டோ ஓட்டுநரை காரில் மோதி கொல்ல முயன்றதாக மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி, கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவா் காலனியைச் சோ்ந்தவா் அசோகன் மகன் தங்கப்பாண்டி (32). இதே ஊரில் உள்ள முத்துராமலிங்கத்தேவா் தெருவைச் சோ்ந்தவா் ராமா் மகன் செல்லகாமு (32). ஆட்டோ ஓட்டுநரான இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த முன்விரோதத்தில், தேனி - மதுரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தங்கப்பாண்டியை காரில் பின்தொடா்ந்து சென்ற செல்லகாமு, அவா் மீது காரில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த தங்கப்பாண்டி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த சம்பவம் குறித்து தங்கப்பாண்டி அளித்த புகாரின் அடிப்படையில், செல்லகாமு மீது தேனி காவல் நிலைய போலீஸாா் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனா்.