தேனி

குடிநீா் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி வடுகபட்டி பேரூராட்சி அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

சோத்துப்பாறை அணையிலிருந்து வடுகபட்டி பேரூராட்சிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 13 ஆவது வாா்டு பகுதியில் மட்டும் குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பேரூராட்சி பணியாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT