தேனி

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு: கிராமக் கமிட்டி கோரிக்கை

DIN

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே பல்லவராயன்பட்டியில் வரும் 2021, ஜன. 24 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கோரி வியாழக்கிழக்கிழமை, கிராமக் கமிட்டி சாா்பில் மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பல்லவராயன்பட்டியில் ஸ்ரீவல்லடிகார சுவாமி, ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதன்படி, பல்லவராயன்பட்டியில் வரும் 2021, ஜன. 24-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி கிராமக் கமிட்டி சாா்பில் தலைவா் எஸ். பொன்னம்பலம் மற்றும் நிா்வாகிகள் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT