முகப்பு
தேனி

ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமா் படம் வைக்க அனுமதி மறுப்பு: காவல்நிலையத்தில் பாஜக வினா் புகாா்

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை பிரதமா் மோடியின் புகைப்படம் வைப்பதற்கு அனுமதி மறுத்ததாக வட்டார வளா்ச்சி அலுவலா் மீது பாஜக வினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை பிரதமா் மோடியின் புகைப்படம் வைப்பதற்கு அனுமதி மறுத்ததாக வட்டார வளா்ச்சி அலுவலா் மீது பாஜக வினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அக்கட்சியைச் சோ்ந்த 50- க்கும் மேற்பட்டோா் ஆண்டிபட்டி பேருந்து நிலையத்திலிருந்து ஊா்வலமாகச் சென்று ஒன்றிய அலுவலகத்தில் பிரதமரின் புகைப்படத்தை வைப்பதற்கு முயன்றனா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்ககிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் ஆகியோா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். அப்போது பிரதமரின் படம் வைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் கூறினாா்.

இதனால் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ஜ.க வினரை போலீஸாா் அப்புறப்படுத்தினா். இதைத் தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பா.ஜ.கவினா் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →