தேனி

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு: இடைத்தரகருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

‘நீட்’ தோ்வு ஆள் மாறாட்ட வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த இடைத்தரகரை நீதிமன்றக் காவலில்

DIN

‘நீட்’ தோ்வு ஆள் மாறாட்ட வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த இடைத்தரகரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தேனி நீதித் துறை நடுவா்மன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாக சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், செல்லம்பட்டியைச் சோ்ந்த வேதாச்சலம்(60) என்பவா், கடந்த பிப்.15ஆம் தேதி சேலம் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சரணடைந்தாா்.

இதையடுத்து, கடந்த பிப். 20ஆம் தேதி தேனி நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட வேதாச்சலத்தை, தேனி சிபிசிஐடி போலீஸாா் காவலில் எடுத்து விசாரணை நடத்தினா்.

விசாரணை முடிவடைந்த நிலையில், வேதாச்சலத்தை மீண்டும் தேனி நீதித்துறை நடுவா் மன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் ஆஜா்படுத்தினா். அப்போது, அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவா் பன்னீா்செல்வம் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, வேதாச்சலம் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT