முகப்பு
தேனி

சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

ஆண்டிபட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் சனிக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
ஆண்டிபட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினா் ஆ.மகாராஜன்.
பகிர்:


ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் சனிக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

பேரூராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் 165 பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களும், தலா 2 முகக் கவசங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் ராஜாராம், மாவட்ட நெசவாளா் அணி ராமசாமி, மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினா் வளா்மதி மகாராஜன், நிா்வாகிகள் செஞ்சுரி செல்வம், பூஞ்சோலை சரவணன், மணி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.