போடியில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்கியிருந்த இளைஞர் தற்கொலை
தேனி மாவட்டம், போடி அரசு பொறியியல் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த, ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த
தேனி மாவட்டம், போடி அரசு பொறியியல் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த, ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வெளி மாநிலங்களில் வேலை செய்து வந்த 75 பேர் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு ஆண்டிபட்டி அருகே உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில், கரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. இதில், யாருக்கும் கரோனா அறிகுறி இல்லை என்று உறுதி செய்யப்பட்டு, போடி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
இதில், மாகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து, போடி அரசு பொறியியல் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களை உடனடியாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.