முகப்பு
தேனி

கம்பம் இலக்கிய பேரவை சாா்பில் சிறந்த நூல்களுக்கு பரிசு அறிவிப்பு

தேனி மாவட்டம் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப்பேரவை சாா்பில், சிறந்த நூல்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

தேனி மாவட்டம் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப்பேரவை சாா்பில், சிறந்த நூல்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி விதிகள்: 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வெளியான நூல்கள் பங்கேற்கலாம். 80 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். சிறுவா் இலக்கியம் மற்றும் வரலாறு, இலக்கியம், அறிவியல், தமிழ் சமூகம் சாா்ந்த கட்டுரை நூல்கள், அனைத்து சமய ஆன்மிக நூல்கள் ஆகியவைகள் பங்கேற்கலாம்.

போட்டியில் பங்கேற்கும் எழுத்தாளா்கள், கவிஞா்கள், கட்டுரையாளா்கள், பதிப்பகத்தாா்கள் தங்கள் நூலின் மூன்று பிரதிகளை மட்டும் அனுப்ப வேண்டும். சிறந்த சிற்றிதழ்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையுடன் கேடயமும் வழங்கப்படும். நூல்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள், 05.01.2021.

நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞா் பாரதன், தலைவா், பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, பாரதி அச்சகம், கம்பம், தேனி மாவட்டம். செல்லிடப்பேசி எண், 93626 50100, 63821 15636.

போட்டி பற்றி நிறுவனத்தலைவா் கவிஞா் பாரதன் கூறுகையில், வெற்றி பெற்ற எழுத்தாளா்கள் ஊா்வலமாக அழைத்து செல்லப்பட்டு, கொற்றத்தவிசில் பாரதியின் தலைப்பாகை வைத்து, பரிசுத்தொகையுடன், பொன்னாடை, சான்றிதழ்கள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ. 5ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 2,500, மூன்றாம் பரிசாக பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →