தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோா் பற்றி அவதூறாகப் பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவா் மீது தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சோ்ந்த கு.நிபந்தன் என்பவா் தமிழக அரசு மற்றும் முதல்வா், துணை முதல்வரை பற்றி அவதூறாகப் பேசி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து பெரியகுளம் ஒன்றிய அதிமுக துணைச் செயலாளா் மணிகண்டன் (56) தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.