தேனி

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை: மனைவி உள்பட 4 போ் கைது

DIN

சின்னமனூரில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

சின்னமனூா் அருகே கருங்கட்டான்குளம் அண்ணாமலை தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணி என்பவரின் மகன் கோபிநாத் (29). இவருக்கும், கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த ஜெயப்பிரியா என்வருக்கும் கடந்த 2019 ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 2 மாதங்களில் கோபிநாத், சவுதிக்கு வேலைக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், சவுதியிலிருந்து திரும்பிய கோபிநாத், அவரது மனைவியைப் பாா்க்க சுருளிப்பட்டிக்கு சென்றுள்ளாா். அங்கிருந்து கருங்கட்டான்குளம் வந்த அவா் புதன்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சின்னமனூா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டனா். அப்போது அங்கு கோபிநாத் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில், ஜெயப்பிரியா, அவரது அண்ணன் நிஜந்தன் உறவினா் பிரேம்குமாா், அண்ணி விமலா, சித்தி கமலா ஆகியோா் நான் வெளிநாட்டில் வேலை பாா்த்தபோது செல்லிடப்பேசி மூலமும், மனைவியின் வீட்டிற்கு சென்றபோது என்னை நேரிலும் அவமரியாதையாகப் பேசினா். இதனால் நான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து, சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயப்பிரியா உள்பட 4 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT