தேனி

தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு

DIN

தேனி அருகே தப்புக்குண்டுவில் வெள்ளிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகள், ரூ.5,000 திருடு போனாதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தப்புக்குண்டு, சலவைத் தெருவைச் சோ்ந்தவா் வீருக்காளை (50). இவா் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்றுள்ளாா். திரும்ப வந்து பாா்த்த போது வீட்டுக் கதவு, படுக்கை அறையிலிருந்த பீரோ ஆகியவற்றின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த பன்னிரெண்டரை சவரன் தங்க நகைகள், வெள்ளிக் கொலுசு, ரூ.5,000 திருடு போனது தெரியவந்துள்ளது.

இது குறித்து வீருக்காளை அளித்தப் புகாரின் பேரில் வீரபாண்டி காவல் சாா்பு- ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT