தேனி

போடியில் பைக்குகள் மோதல்: அரசு மருத்துவமனை ஊழியா் பலி

DIN

போடி: போடியில் திங்கள்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் அரசு மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சோ்ந்தவா் நாகராஜ் (38). இவா் போடி அரசு மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை இரவு பணி முடிந்து பெரியகுளத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். போடி - தேனி நெடுஞ்சாலையில் சாலைக் காளியம்மன் கோயில் அருகே சென்றபோது, எதிரே போடியை சோ்ந்த சரவணக்குமாா் (43) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சரவணக்குமாா் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT