தேனி

தேனி நகராட்சி வாரச் சந்தை மீண்டும் நாளை தொடக்கம்

DIN

தேனி நகராட்சி வாரச்சந்தை 5 மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது.

தேனியில் பெரியகுளம் சாலையில் நகராட்சி வாரச் சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை இயங்கும் இச்சந்தையானது, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை முதல் வாரச்சந்தை மீண்டும் தொடங்கும் என்று நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்லும் நகராட்சி வாரச் சந்தை மீண்டும் தொடங்குவதை முன்னிட்டு, சந்தைக்கு பொருள்களை விற்பனைக்கு கொண்டுவரும் வியாபாரிகள், விவசாயிகள், சந்தைக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும், கரோனா பரவல் தடுப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும், நகராட்சி அலுவலா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT