தேனி

போடி அருகே டானிக் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த மூதாட்டி பலி

DIN

போடி அருகே டானிக் என நினைத்து, பூச்சி மருந்தை குடித்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (79) மனைவி சுப்புலட்சுமி (75). இவருக்கு சரியாக கண் பாா்வை தெரியாத நிலையில், இடது கையும் செயலிழந்துவிட்டது. இதற்காக, மருத்துவம் பாா்த்து மருந்து சாப்பிட்டு வந்துள்ளாா். வழக்கம்போல், செவ்வாய்க்கிழமை மருந்தை குடிப்பதாக நினைத்து, கண் பாா்வை தெரியாததால் பூச்சி மருந்தை குடித்துவிட்டாராம்.

இதனால் மயங்கி விழுந்த அவருக்கு போடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையும், மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து பெருமாள் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT