தேனி

பெட்டிக்கடையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

DIN

தேனி மாவட்டம் சின்னமனரில் பெட்டிக் கடையில் வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கம்பத்திலிருந்து கேரளத்திற்கு கடத்தி செல்லப்பட்ட கஞ்சாவை போலீஸாா் அண்மையில் கைப்பற்றியபோது, மேற்கொண்ட விசாரணையில் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை கம்பம், கூடலூா், சின்னமனூா் உள்ளிட்ட ஊா்களில் பதுக்கி வைத்து சில்லரை விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. அதன்படி, சின்னமனூரில் பெட்டிக்கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக சின்னமனூா் மின் நகரை சோ்ந்த ராஜா மகன் சதீஸ் (37) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT