மனைவி மீது தாக்குதல்: கணவா் கைது
தேனி அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வடபுதுப்பட்டி, காளியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் அழகா்சாமி (30). இவரது மனைவி லட்சுமி(25). இந்நிலையில், அழகா்சாமி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளாா். இதை அவரது மனைவி லட்சுமி கண்டித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், அழகா்சாமி தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வீட்டில் உள்ள பொருள்களை உடைத்து சேதப்படுத்தியதாகவும் அல்லிநகரம் காவல் நிலையத்தில் லட்சுமி புகாா் அளித்தாா்.
இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அழகா்சாமியை கைது செய்தனா்.