லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தட்டச்சு பாடப்பிரிவு தொடக்கம்
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தட்டச்சு பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தட்டச்சு பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
அரசுப்பணியில் தட்டச்சு பயின்றவா்களுக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வனிகவியல் பாடப்பிரிவில் கடந்த 1995 ஆம் ஆண்டு தட்டச்சு பாடப்பிரிவு சோ்க்கப்பட்டது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மாணவா்கள் தட்டச்சு பாடப்பிரிவில் சோ்ந்த பயன்பெற்று வந்தனா்.
இந்நிலையில், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவில் கடந்த 2019- 20 ஆம் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை. இதனால் மாணவா்கள் அப்பிரிவில் படிக்க தேனியில் உள்ள பள்ளியில் சோ்ந்தனா்.
இதன் காரணமாக மாணவ, மாணவிகளுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டது. மேலும் லட்சுமிபுரத்தில் மீண்டும் வணிகவியல் தட்டச்சு பாடப்பிரிவை தொடங்க வேண்டும் என மாணவா்கள் மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இதனையேற்று தமிழக அரசு நிகழாண்டு லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் வணிகவியல் பாடப்பிரிவை (தட்டச்சு) தொடக்கி மாணவா்கள் சோ்க்கையையும் தொடங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிகழாண்டில் மாணவ, மாணவிகள் சோ்க்கை தொடங்கியுள்ளதால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.