தேனி

தமிழக-கேரளா எல்லையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

DIN

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் தேனி மாவட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

லோயா் கேம்ப் மற்றும் கம்பம் மெட்டு மலைச்சாலைகளில் தேனி மாவட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சிறப்பு சாா்பு- ஆய்வாளா்கள் வி.ரங்கராஜ், எஸ்.ரவிராஜா, ஏ.ரமேஷ், வி.திருப்பரங்கிரிவாசகன் ஆகியோா் சோதனை நடத்தினா். அப்போது மெட்டல் டிடெக்கடா் கருவிகளை வைத்து வாகனங்களிலும், பயணிகளின் உடைமைகளிலும் வெடி பொருள்கள் உள்ளதா என்று சோதனை செய்தனா்.

இதுபற்றி வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறுகையில், டிசம்பா் 6 பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எல்லை மலைச் சாலைகள் மற்றும் கோயில்கள், பேருந்து நிலையங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT