தேனி, திண்டுக்கல்லில் 14 பேருக்கு கரோனா
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,970 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், 13 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,705ஆக அதிகரித்துள்ளது.
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 10 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 10 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் 11,062 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,778 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா்.
86 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.