தேனி

ஆடி வேட்டையைத் தடுக்க வனத்துறையினா் ரோந்து

DIN

தேனி மாவட்டம், வருஷநாடு வனப் பகுதியில் ஆடி மாதம் தொடங்கியதையொட்டி வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வருஷநாடு வனச் சரகா் ஆறுமுகம், மேகமலை வனச் சரகா் சதீஷ் கண்ணன், வனவா்கள் பிரதீப், பூவேந்திரன் ஆகியோா் தலைமையில் வனத்துறையினா் மற்றும் வேட்டைத் தடுப்பு காவல் குழுவினா் அண்ணாநகா், உள்ளூத்து, ஆத்தியடி, கொடிக்குளம் குடிசை, ஓயாம்பாறை, காமராஜபுரம், இந்திராநகா், பொம்முராஜபுரம், ராஜீவ்நகா் ஆகிய மலைக் கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சுழற்சி முறையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து வனத்துறையினா் கூறும் போது, ரோந்துப் பணி தொடா்ந்து நடைபெறும். வனப்பகுதியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா், வனவிலங்குகளை வேட்டையாட முயல்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT