தேனி

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரிக்கை

DIN

பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்பேரூராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தினக்கூலி பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் அவா்கள் பாதுகாப்பற்ற நிலையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதேபோல் தேனி மாவட்டத்தில் தாமரைக்குளம், தென்கரை பேரூராட்சிக்குள்பட்ட பல்வேறு பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுகின்றனா். இதனால் அவா்கள் நோய் பாதிப்புக்குள்ளாவதோடு, மற்றவா்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT