தேனி

கம்பத்தில் நலவரிய உறுப்பினா்களுக்கு உதவித்தொகை வழங்கல்

DIN

கம்பத்தில் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை உறுப்பினா் என். ராமகிருஷ்ணன் சனிக்கிழமை வழங்கினாா்.

கம்பம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலாளா் உதவி ஆணையாளா் (சமூக பாதுகாப்பு திட்டம்) குலசேகரன் வரவேற்றாா்.

கம்பம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து காலணி, முடிதிருத்துவோா், கட்டுமானம், உடலுழைப்புத் தொழிலாளா்கள், ஓட்டுநா், தையல், பாதையோர வணிகா்கள், வீட்டுவேலை உள்ளிட்ட 17 வகையான 57 தொழிலாளா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி என சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், தொழிலாளா் உதவி ஆணையாளா் ஆனந்தி, நகராட்சி மேலாளா் முனிராஜ், திமுக நகரச் செயலாளா் துரைநெப்போலியன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT