முகப்பு
தேனி

பெரியகுளம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள்:ஆட்சியா் ஆய்வு

பெரியகுளம் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளை, தேனி மாவட்ட ஆட்சியா் ஹெச். கிருஷ்ணன் உன்னி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

பெரியகுளம் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளை, தேனி மாவட்ட ஆட்சியா் ஹெச். கிருஷ்ணன் உன்னி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பெரியகுளம் பகுதியில் பெரியகுளம், தாமரைக்குளம், ஜெயமங்கலம் மற்றும் தேவதானப்பட்டி ஆகிய வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளை, மாவட்ட ஆட்சியா் ஹெச். கிருஷ்ணன் உன்னி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், வாக்காளிக்க வரும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, பெரியகுளம் சாா்-ஆட்சியா் சினேகா, பெரியகுளம் வட்டாட்சியா் இளங்கோவன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.