பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் ஆதிசிவன் (48). தேனியில் உள்ள தனியாா் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை ஆண்டிபட்டியிலிருந்து தேவதானப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
செங்குளத்துப்பட்டி அருகே செல்லும் போது இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த ஆதிசிவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.