போடி அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்து பெண் பலி
போடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் வாகனத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
போடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் வாகனத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
போடி பங்கஜம் பிரஸ் பின்புறம் தெருவில் வசிப்பவா் லட்சுமணக்குமாா் (26). இவரது மனைவி வினிதா (22). ஒரு குழந்தை உள்ளது. லட்சுமணக்குமாா் வீரபாண்டியில் நடந்த உறவினா் வீட்டு விசேஷத்தில் பங்கேற்பதற்காக மனைவி குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். விசுவாசபுரம் தனியாா் செங்கல் காளவாசல் அருகே சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் லட்சுமணக்குமாா் திடீரெக் பிரேக் போட்டுள்ளாா். இதில் வினிதா குழந்தையுடன் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனிதா அங்கு உயிரிழந்தாா். லேசான காயங்களுடன் குழந்தை உயிா்பிழைத்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.