முகப்பு
முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த நீர்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள்.
தேனி

முல்லைப் பெரியாறு அணையில் நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனர். 

தேனி

முல்லைப் பெரியாறு அணையில் நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த நீர்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள்.
பகிர்:

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனர். 

நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி பொறியாளர்கள், பொதுப்பணித் துறையினர் அனுமதியுடன், ஆண்டு தோறும் கள ஆய்வில் 21 நாள்கள் அணைகள், மற்றும் மின்நிலையங்களை ஆய்வு செய்வது வழக்கம். 

இதன் ஒரு பகுதியாக மதுரை ஸ்டாப் டிரைனிங் இன்ஸ்டியூட் நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன பொறியாளர்கள் 30 பேர்கள் இயக்குநர் திலகவதி தலைமையில் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு செய்தனர்.

முன்னதாக இவர்கள் தேக்கடி படகுத்துறையிலிருந்து தமிழக பொதுப்பணி துறையினரின் இரண்டு படகுகளில் அணைக்கு சென்றனர். 

அங்கு பெரியாறு அணை, மதகுப்பகுதி, பேபிஅணை ஆகியவற்றில் களஆய்வு நடத்தினர்.  இந்த ஆய்வின்போது தமிழக பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவிப்பொறியாளர்கள் ராஜகோபால், குமார் பயிற்சி அலுவலர்களுக்கு விளக்கம் கொடுத்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →