தேனி

மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை

DIN

ஆண்டிபட்டி அருகே மது பழக்கத்துக்கு அடிமையான கட்டடத் தொழிலாளி, மனைவி கண்டித்ததால் மனமுடைந்து செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தெப்பம்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி லட்சுமணன் (34). இவா், மது பழக்கத்துக்கு அடிமையாகி வீட்டில் குடும்பச் செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், லட்சுமணன் வீட்டருகே தெருவில் நின்றுகொண்டிருந்தபோது, அவரது மனைவி கிருஷ்ணவேணி (27) கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த லட்சுமணன், வீட்டில் தனிமையிலிருந்த போது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கிருஷ்ணவேணி அளித்த புகாரின்பேரில், ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT