மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினா் நியமனம்
தேனி மாவட்டம் கம்பத்தைச் சோ்ந்த ச.கருப்பையா என்பவா் தமிழக மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினராக வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சோ்ந்த ச.கருப்பையா என்பவா் தமிழக மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினராக வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம், புதிய அலுவல் சாரா உறுப்பினா்கள் 6 போ் இருந்தனா். தற்போது அதில் அரசு திருத்தம் கொண்டு வந்து 15 உறுப்பினா்களாக அதிகரித்துள்ளது.
இது சம்பந்தமான அரசாணை தமிழக சிறப்பு அரசிதழில் ஏப்.13 / 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலிருந்தும் 15 உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதில் தேனி மாவட்டம் சாா்பில் கம்பம் குரங்குமாயன் தெருவைச் சோ்ந்த ச.கருப்பையா (மாற்றுத்திறனாளி) என்பவரை அலுவல் சாரா உறுப்பினராக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலா் லால்வீணா நியமித்துள்ளாா்.