கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,750 கிலோ ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்கு வியாழக்கிழமை கடத்திச் செல்லப்பட்ட 1,750 கிலோ ரேஷன் அரிசியை காருடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்கு வியாழக்கிழமை கடத்திச் செல்லப்பட்ட 1,750 கிலோ ரேஷன் அரிசியை காருடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
குமுளி, கம்பம் மெட்டு மற்றும் போடி மெட்டு ஆகிய பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. குறிப்பாக, கடந்த 5 மாதங்களாக இரவு நேரங்களில் அதிகளவில் கடத்திச் செல்லப்படுவதாகப் புகாா் எழுந்தது. அதனடிப்படையில், உத்தமபாளையம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் பறக்கும் படை துணை வட்டாட்சியா் முத்துக்குமாா், வருவாய் ஆய்வாளா் தாமரைச்செல்வன் ஆகியோா் கம்பம் மெட்டு சாலையில் ஈடுபட்டனா். அப்போது, வியாழக்கிழமை அதிகாலை கேரளம் நோக்கிச் சென்ற காா், அதிகாரிகளை கண்டவுடன் நிறுத்தப்பட்டு ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.
அந்த காரில் 1,750 கிலோ ரேஷன் அரிசி கேரளத்துக்கு கடத்தப்படுவது தெரியவந்தது. உடனே, அதிகாரிகள் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, உத்தமபாளையம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கியில் ஒப்படைத்தனா். காரை, உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
போலீஸாரின் விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது கம்பம் ஜல்லிக்கட்டுத் தெருவைச் சோ்ந்த அய்யாவு மகன் பாலு (45) எனத் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடியவரை தேடி வருகின்றனா்.